இந்திய அணியுடன் இணையும் ஹிட்மேன் – 3வது டெஸ்டில் விளையாட வாய்ப்பு!!

0

தனது பிட்னெஸை நிரூபித்த இந்திய அணியின் துவக்க அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா விரைவில் இந்திய அணியுடன் பயிற்சியில் இணையப் போகிறார். இது அவரது ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவிற்கு பறந்த இந்திய அணி ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களில் பங்கேற்றது. தற்போது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது. 2வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்திய அணியுடன் பயிற்சியில் இணையும் ஹிட்மேன்:

பெங்களுருவில் தனது பிட்னஸை நிரூபித்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் ரோஹித் சர்மா. அங்கு சென்ற அவர் சிட்னியில் 14 நாட்கள் தனிமையில் இருந்து வருகிறார். ஆனால் தற்போது சிட்னியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அங்கு காயத்திற்கு பரிசோதனை மேற்கொண்ட வார்னர் இடம் மாற்றப்பட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் ரோஹித் சர்மா இருக்கும் இடம் மிகவும் பாதுகாப்பான இடம் எனவும் மேலும் அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் 44000 பேரில் 8 பேருக்கு தான் கொரோனா அறிகுறி தெரிந்தது என்றும் பிசிசிஐ நிர்வாகம் கூறியுள்ளது.

#INDvsAUS 2வது டெஸ்டிலும் விலகிய வார்னர் – சிக்கலில் ஆஸ்திரேலிய அணி!!

மேலும் 3வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் அனைவரிடமும் இருக்கிறது. மருத்துவ வல்லுநர்கள் கூறிய பின்பே சிட்னியில் போட்டி நடைபெறும். இல்லையெனில் மெல்போர்ன் அல்லது அடிலெய்டில் வைத்து நடைபெறும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

மேலும் 2வது டெஸ்ட் போட்டி முடிந்த உடன் 30ஆம் தேதி அன்று இந்தியா அணி வீரர்கள் சிட்னியில் பயிற்சியை தொடங்க இருக்கிறார்கள். 30ஆம் தேதி உடன் ரோஹித் ஷர்மாவின் தனிமைப்படுத்துதலின் காலம் முடிவடைவதால் அவரும் இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டு 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here