#INDvsAUS டெஸ்ட் தொடர் – இந்திய அணிக்கு சல்யூட்!! ஆஸ்திரேலியா கிரிக்கெட் எழுதிய கடிதம்!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா அணியின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா தொடரை வென்றுள்ளது. இதனை பலதரப்பினர் பாராட்டி வந்தனர். தற்போது டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓர் கடிதம் எழுதியுள்ளது.

பார்டர் கவாஸ்கர் கோப்பை:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட இந்தியா அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை விளையாடி இரு அணிகளும் தலா 1 முறை தொடரை கைப்பற்றியுள்ளனர். இந்த இரு அணிகளுக்கும் இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா அணி மிக சிறப்பாக செயல்பட்டு தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளனர். இந்த சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இது தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியா அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆஸ்திரேலியா வாரியம் எழுதிய கடிதம்:

தற்போது இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஓர் கடிதம் எழுதியுள்ளது. அது என்னவென்றால், மிகவும் முக்கியமான இந்த காலத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு தந்த இந்தியா அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பிசிசிஐ அனைவருக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியினர் கடந்த 9 வார காலமாக இந்த நீண்ட தொடரை கொரோனா சமயத்தில் விளையாடியுள்ளார்கள்.

மேலும் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான தொடரில் இந்த ஆண்டு நடைபெற்றது தான் சிறப்பான ஒன்று. காரணம் பல இன்னல்கள்,தடைகளை தாண்டி போட்டி நடந்து இந்தியா அணி தனது வெற்றியை பதித்துள்ளது. இந்த தொடரின் மூலம் சிறப்பாக பங்குபெற்று உலகம் முழுக்க சர்வதேச விளையாட்டு போட்டியின் மிகப்பெரிய தூதுவர் தாங்கள்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது பிசிசிஐ. மேலும் பிசிசிஐ அமைப்பில் உள்ளவர்கள் இந்த தொடருக்கான செய்த தியாகத்தை நாங்கள் மறக்கமாட்டோம். பும்ராஹ் முதல் கம்மின்ஸ் வரை பௌலிங்கில் அசத்தியுள்ளார்.

அசைவ உணவு சாப்பிட்டால் ‘ராயல் என்பீல்ட்’ பைக் பரிசு – மஹாராஷ்டிராவில் நடந்த நிகழ்வு!!

மேலும் பேட்டிங்கில் ரஹானே, ஸ்மித், சுப்மங் கில் மற்றும் க்ரீன் ஆகியோரும் இந்த தொடரில் தங்களது சிறப்பான வெளிப்படுத்தியுள்ளனர். இந்த தொடர் நடக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எங்களது நன்றிகள். பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியின் வலியையையும், உறுதியையும் நாங்கள் பாராட்டுகிறோம். அவர்களுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சார்பாக சல்யூட்! இந்த தொடரில் இந்தியா அணி பெற்ற வெற்றி பல தலைமுறைகளுக்கு பேசப்படும், என்று இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பாராட்டி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here