தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களின் சில பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
டெல்டா பகுதிகளில் மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது ஓய்ந்திருக்கிறது. கடந்த இரண்டு வாரமாக தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இரண்டு நாட்களாக வெயில் தொடங்கியிருக்கிறது. தற்போது இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை தென் தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் மழை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அசைவ உணவு சாப்பிட்டால் ‘ராயல் என்பீல்ட்’ பைக் பரிசு – மஹாராஷ்டிராவில் நடந்த நிகழ்வு!!
மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காரைக்கால் மட்டும் புதுச்சேரி பகுதிகளிலும் நாளையும் நாளை மறுநாளும் வானம் வறண்டு காணப்படும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சிஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும் என அறிவித்துள்ளது.