தள்ளிப்போகிறதா விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்??  வெளியான முக்கிய தகவல்!!!

0
தள்ளிப்போகிறதா விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்??  வெளியான முக்கிய தகவல்!!!
கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அன்றைய தினமே விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது 7 வது கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தல் தள்ளிப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.  தற்போது கடைசி கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here