#INDvsAUS சிட்னி டெஸ்ட் – மீண்டும் அத்துமீறும் ஸ்மித்!! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

0

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்மித் மீண்டும் அத்து மீறியுள்ளார். அதற்கான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தற்போது டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வைத்து இன்றோடு முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்தியா அணியின் அஸ்வின் மற்றும் விஹாரியின் சிறப்பான ஆட்டத்தால் போட்டி டிராவில் முடிந்தது. ஏற்கனவே ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் பந்து கீறிய விவகாரத்தில் 1 ஆண்டு காலம் தடை செய்தது நினைவிற்கும். தற்போது அவர் மீண்டும் எல்லை மீறியுள்ளார். இதற்கான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 வது போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா அணியின் ரிஷாப் பாண்ட் மிக அருமையாக விளையாடி கொண்டிருந்தார். அவரின் விளையாட்டை பார்க்கும் போது இந்தியா அணி கண்டிப்பாக வெற்றி பெரும் என்று அனைவராலும் எண்ணப்பட்டது. ஆனால் அவர் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பாண்ட் பந்தை கணிப்பதற்காக தன் காலால் இட்ட கார்ட் என்னும் அடையாளத்தை ஸ்டும்பிற்கு முன்பு குறித்துள்ளார்.

மீண்டும் அத்து மீறும் ஸ்மித்:

இந்த குறி மூலமே பேட்ஸ்மேன்கள் பந்துகளை கணித்து விளையாடி வருவார்கள். இந்நிலையில் ஸ்மித் அத்துமீறிய செயல் ஒன்றை செய்துள்ளார். சரியான நேரத்தை பயன்படுத்திய ஆஸ்திரேலியா அணியின் ஸ்மித் யாருக்கும் தெரியாமல் ரிஷாப் பாண்டை குழப்பும் வகையில் அதற்கு பக்கத்தில் வேறு ஓர் குறியை இட்டுள்ளார். இந்த செயல் அங்குள்ள ஸ்டம்ப் கமெராவில் பதிவாகியுள்ளது. இருந்தும் பாண்ட் அம்பையரிடம் கேட்டு வேறு ஓர் குறியை இட்டு விளையாடினார். தற்போது ஸ்மித் செய்த செயலின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி, பார்த்திபன் கூட்டணி – ‘துக்ளக் தர்பார்’ டீசர் வெளியீடு!!

மேலும் இந்த சம்பவம் குறித்து “தந்திரம் செய்து வெற்றியை தேடுகிறார் ஸ்மித்”, இன்னும் அவர் திருந்தவில்லை என்று பலர் கூறிவருகின்றனர். மேலும் இதுகுறித்து இந்தியா அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் கூறுகையில், “பண்டின் அடையாளத்தை மறைக்க முயன்ற ஸ்மித்தின் ட்ரிக் உள்ளிட்ட அனைத்து திட்டத்தையும் இந்திய அணி முறியடித்துள்ளது. இந்திய அணியை நினைத்து மிக பெருமையாக உள்ளது” என்று தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்மித்தின் இந்த செயலால் அவர் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். சமூகவலைத்தளங்களில் ஸ்மித்தை வறுத்தெடுத்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here