திருமணம் ஆக உள்ள பெண்களுக்காக ஒரு சூப்பரான குளியல் பவுடர். திருமணம் ஆவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே இந்த குளியல் பவுடரை பயன்படுத்தி வந்தால் உடல் முழுவதும் சிவப்பாக மாறும். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளும்.
திருமண பெண்களுக்காக:
திருமணம் என்றாலே இன்றைக்கு பெண்கள் பார்லர்களில் பணத்தை கொட்டி தீர்க்கின்றனர். பல கெமிக்கல் கலந்த கிரீம்களை பார்லர்களில் பயன்படுத்துவதால் சில நாட்களில் முகம் கருப்பாக மாறிவிடுகிறது. சிலருக்கு வீட்டில் இருக்கும்போது முகம் பளபளப்பாக இருக்கும்.
ஆனால், வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தால் முகமே கருப்பாக, எண்ணெய் பசையாக இருக்கும் இதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் கிரீம்கள். இந்த குளியல் பவுடரை தினமும் பயன்படுத்தினாலே போதும் முகம் எப்பொழுதும் பளிச்சென்றும், வெள்ளையாகவும் இருக்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், கருவளையம் போன்றவை நீங்கும். மேலும், அந்தரங்க பகுதிகளில் ஏற்படும் கருமை மறையும்.
அடர்த்தியான, கருமையான கூந்தலை பெற வேண்டுமா?? சூப்பரான ஹேர் ஆயில்!!
தேவையான பொருட்கள்: பச்சைப்பயறு, ரோஜா இதழ்கள், பூலாங்கிழங்கு, கஸ்த்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு, அதிமதுரம், கார்போக அரிசி, ஆவாரம் பூ, மாதுளை தோல், ஆரஞ்சு தோல், வெப்பம் பூ, வெட்டி வேர், துளசி, நன்னாரி வேர், வசம்பு, முல்தானி மட்டி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துகொள்ள வேண்டும். வீட்டில் கிடைக்காத பொருட்கள் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் அரைத்து காற்று புகாத பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும். தினமும் சோப்பிற்கு பதிலாக தேவையான அளவு மாவை எடுத்து பாலாடை அல்லது பச்சை பால், எலுமிச்சை சாறு, தேவைப்பட்டால் வைட்டமின் “E” மாத்திரை ஆகியவற்றை கலந்து குளிக்கும்போது உடல் முழுவதும் தேய்த்து 20 நிமிடம் ஊறவைத்து பின் குளித்தால் ஒரு மாதத்தில் உடல் தங்கமாக மின்னும்.