அசைவ பிரியர்கள் மற்றும் சைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவில் முட்டையும் ஒன்று. இதில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. மேலும் குழந்தைகளுக்கு இதனை தினமும் கொடுத்து வந்தால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
முட்டை – 4
வெங்காயம் – 2
தக்காளி – 2
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
கிராம்பு
பட்டை
இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தேங்காய் விழுது – அரை கப்
செய்முறை
முதலில் முட்டையை நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
இப்பொழுது ஓரளவிற்கு சுருண்டு வந்ததும் அதில் இஞ்சிபூண்டு விழுதை சேர்க்கவும். இப்பொழுது அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியா தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். இப்பொழுது அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து சிறிது உப்பும் சேர்த்துக்கொள்ளவும். இப்பொழுது இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
நன்கு கொதி வந்ததும் ஓரளவிற்கு சுண்டி வரும் அப்பொழுது முட்டையை சேர்த்து கிளறவும். மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு பிறகு இறக்கினால் சுவையான முட்டை மசாலா தயார். இது சப்பாத்தி மற்றும் பூரிக்கு மிகவும் சுவையாக இருக்கும்.