குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் சிக்கனும் ஒன்று. சாதம், சப்பாத்தி, இட்லி மற்றும் தோசை என அனைத்துக்கும் உகந்த சிக்கன் கிரேவி எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன் 1/2 கி
- பச்சைமிளகாய் 3
- இஞ்சி சிறிய துண்டு
- பூண்டு 4 பல்
- பட்டை, கிராம்பு
- முந்திரி 10 கிராம்.
- பாதாம் 10 கிராம்
- தேங்காய்
- தயிர்
- பெரிய வெங்காயம்
- மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
- மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
- கரம் மசாலா ஒரு தேக்கரண்டி
செய்முறை
முதலில் சிக்கனை மஞ்சள்தூள் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ளவும். பிறகு இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் போன்றவற்றை நன்கு அரைத்து சிக்கனில் சேர்த்து பிசைந்துகொள்ளவும். அதன்பின் முந்திரி, பாதம் தேங்காய் சேர்த்து விழுதாக அரைத்து அதனையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். சிறிது தயிர், மஞ்சள்தூள் மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
அதனை தொடர்ந்து பெரிய வெங்காயத்தை நறுக்கி மொறுமொறுப்பாக வறுத்து அதனை சிக்கனில் சேர்க்கவும். இதனை நன்கு கலந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சேர்த்து நாம் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும். நன்கு வதக்கிக்கொண்டே இருக்கவும். பிறகு மூடி போட்டு மூடிக்கொள்ளவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சிக்கன் கிரேவி தயார்.