நினைத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா?? புரட்டாசி வழிபாடு!!

0
murugan

நாம் வேண்டிய வரங்களை பெற, நினைத்தது நிறைவேற கடவுளின் அனுக்கிரகம் மிகவும் முக்கியம். அதுவும் சில அற்புத நாட்களில் கடவுளை நினைத்து வேண்டினால் கண்டிப்பாக நம் கஷ்டங்கள் விலகி வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். இந்த வழிபாடுகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.

வழிபாடுகள்

கடவுளிடம் முழு நம்பிக்கையுடன் உண்மையான பக்தியும் எளிமையான வழிபாட்டையும் வெளிப்படுத்தினால் கட்டாயம் நல்வழியை காட்டுவார். நமது நியாயமான ஆசைகளையும் நிறைவேற்றுவார். சில கிரக சாரங்கள் நடந்து கொண்டிருக்கும் போது சில கஷ்டங்களை நாம் அனுபவித்து தான் தீர வேண்டும். மேலும் கடவுளை மனதார வழிபட்டு வந்தால் இதற்கான கஷ்டங்கள் தீரும்.

murugan
murugan

புரட்டாசி மாதத்தில் வரும் சங்கடகர சதுர்த்தி தினம் ஒரு அற்புதமான நாள் என்றே சொல்லலாம். அந்த தினங்களில் விநாயகரை நினைத்து வழிபட்டால் நிச்சயம் வேண்டிய வரத்தை பெறலாம்.

உண்மையான பக்தனுக்கு, கஷ்டம் என்றால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர் தான் முருக பெருமான். புரட்டாசி மாதத்தில் செவ்வாய் கிழமை அல்லது முருகனுக்கு ஏற்ற நாளில் அவருக்கு அரளிப்பூ மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெரும். வாழக்கையில் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கும்.

puratasi viratham

மேலும் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் வீட்டிலோ அல்லது கோவிலுக்கோ சென்று பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். மேலும் அன்னதானம் வழங்கி கடவுளுக்கு நெய்வேத்தியம் படைத்து வழிபடலாம். இதனால் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் மறையும். நினைத்த காரியத்தில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here