பெண்களுக்கு தற்போது உள்ள பெரிய பிரச்சனையே முகப்பருக்கள் தான். பருவ வயதில் தான் முகப்பருக்கள் தோன்றுகின்றன. அதை அப்படியே விட்டு விட்டால் போய்விடும். ஆனால் நாம் அதை கிள்ளுவது, தொடுவது போன்ற செயல்களில் ஈடுபடும்போது அந்த முகப்பரு மற்ற இடங்களுக்கு பரவுகிறது. மேலும் தழும்புகள் ஏற்படுகிறது. அதனால் முகத்தில் குழிகளும் விழுகின்றன. அது நாட்கள் செல்ல செல்ல முக அழகையே கெடுக்கிறது. முகத்திலுள்ள தழும்புகள் மற்றும் குழிகள் அகல சில வழிமுறைகள் உள்ளன வாங்க பார்க்கலாம்.
முகப்பரு
ஆரம்பகட்டத்தில் முகப்பருக்கள் வரும்போது அதனை அப்படியே விட்டுவிட வேண்டும். இல்லையெனில் அதில் மஞ்சள் மற்றும் தயிர் கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் வராமல் தடுக்கலாம். மேலும் முகத்தை அடிக்கடி கழுவி வந்தால் அழுக்குகள் முகத்துவாரங்களில் சேராமல் இருக்கும்.
முகத்தை சரிவர பராமரிக்க வில்லையெனில் இறந்த செல்கள் முகத்திலேயே தங்கி விடும். இதனால் ஆங்காகே கருப்பாக இருக்கும்.
இப்பொழுது முகத்தில் உள்ள குழிகள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற 4 வழிமுறைகள் உள்ளன. இந்த 4 வழிமுறைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் கண்டிப்பாக நல்ல பலனை பெறலாம்.
வழிமுறை – 1 : வாழைப்பழத்தோல், தேன் இரண்டையும் எடுத்துக்கொள்ளவும். வாழைப்பழத்தை ஸ்பூன் மூலம் அதன் மேல் உள்ளவற்றை சுரண்டி எடுத்து சிறிய பௌலில் போட்டுக்கொள்ளவும். அதன்பின் அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும்.
வழிமுறை – 2: முல்தானிமெட்டி, முட்டை வெள்ளை கரு, வெள்ளரிக்காய் அல்லது தக்காளி சாறு இவற்றை சேர்த்து கலந்துகொள்ளவும். வாழைப்பழ தோலில் இந்த கலவையை தொட்டு முகத்தில் தடவவும். அல்லது தக்காளி தோல் வைத்து தடவவும். 15 நிமிடம் ஊறவைத்து பிறகு கழுவவும்.
வழிமுறை 3: சர்க்கரை மற்றும் தண்ணீர் கலந்து அதனை முகத்தில் scrub செய்யவும். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
வழிமுறை 4: இறுதியாக கற்றாழையை எடுத்து முகத்தில் தடவவும். இதனால் முகம் குளிர்ச்சி அடையும். இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
இந்த நான்கு வழிமுறைகளை நாம் தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் கண்டிப்பாக நல்ல பலனை பெறலாம். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி இறந்த செல்களை வெளியேற்றும்.