உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு இந்த சுடு தண்ணீர் போதும் – வாங்க தெரிஞ்சிக்கலாம்!!

0

நம்ம உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க சில வழிமுறைகள் இருக்கிறது. தினமும் நாம் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். எந்த செலவும் இல்லாமல் வெந்நீரை வைத்தே உடலை அழகாக வைக்க முடியும். சாப்பாடு இல்லாமல் கூட சில நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் உயிர் வாழவே முடியாது. ஆகையால், தண்ணீர் எப்பொழுது எப்படி குடிக்க வேண்டும் என்பதைப்பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்.

வெந்நீரின் நன்மைகள்:

உணவு அருந்துவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் சாப்பாட்டிற்கு முன், சாப்பாட்டிற்கு பின் வெந்நீர் குடித்தால் உணவில் உள்ள கெட்ட கொழுப்புகள் உடம்பில் தங்காமல் உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

அதிகமாக தாகம் எடுத்தால், பச்சை தண்ணீரைக் குடிக்காமல் வெதுவெதுப்பான வெந்நீரை குடித்தால் உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும். வாயு தொல்லை இருப்பவர்கள் சுக்கு கலந்த வெந்நீரை குடித்தால் வாயு தொல்லை இருக்காது. அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

வெந்நீர் குடிப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இதயத்தில் அடைப்பு உள்ளவர்கள் வெந்நீர் குடித்தால் இதயஅடைப்பு வராது என்று கூட சொல்லப்படுகிறது. வயிற்று புண்ணால் ஏற்படும் வலியை குறைக்க, மிதமான சூடான வெந்நீரை சிறிது சிறிதாக குடிப்பது நல்லது. விருந்து மற்றும் விழாக்களில் அதிகமாக சாப்பிட்டு விட்டோம் என்று கவலைபடுகிறீர்களா ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் சாப்பிட்ட உணவானது அரை மணிநேரத்தில் ஜீரணமாகிவிடும்.

மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீர் அடிக்கடி குடித்து வர சருமம் அழகாக இருக்கும். தினமும் அடிக்கடி வெந்நீர் குடித்து வந்தால் இளமையில் முதுமை வராது. அல்சர் உள்ளவர்கள் வெந்நீர் குடிக்க கூடாது . ஏனென்றால், வயிற்றுபுண் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை புளூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகிவிடும். வெதுவெதுப்பான நீரை ஒரு டப்பில் ஊற்றி, அதில் கல் உப்பு போட்டு கலக்கவும். அந்த வெந்நீரில் கால் பாதங்களை பதினைந்து நிமிடம் வைத்து எடுத்தால் கால் வலி இருக்காது.

தைராய்டு நோய் இருப்பவர்கள் வெந்நீரில் மல்லியை போட்டு குடித்தால் முகம் மற்றும் கழுத்து வீக்கம் இருக்காது. நாளடைவில் தைராய்டு நோய் சரியாகவும் வாய்ப்பு உள்ளது. முக்கியமாக பெண்களை தைராய்டு நோய் அதிகமாக தாக்குகிறது. உடல் எடை அதிர்ச்சியடையும் அளவிற்கு வேகமாக அதிகரிக்கிறது. இந்த மாதிரியான பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி வெந்நீர் குடிப்பது, வெந்நீரில் மல்லியை வேகவைத்து குடித்தால் சரியாகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here