முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்று, அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தங்கள் முகம் சாப்ட் ஆக இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது. ஆனால், பருவநிலை மாற்றம், ஒரு ஒரு தோல் அமைப்பு இதன் காரணமாக பலருக்கு எப்படி பராமரிப்பது என்று தெரியவில்லை. அதற்கு வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு ஒரு சூப்பர் ஆன பேஸ் பேக்.
தேவையான பொருட்கள்:
- கஸ்தூரி மஞ்சள் – 1 டீஸ்பூன்
- சதா மஞ்சள் – 1 டீஸ்பூன்
- பாசிப்பருப்பு – 2 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
செய்முறை:
- முதலில், பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு இவை ரெண்டையும் கொஞ்ச நேரம் ஊறவைத்து அதன் பின், நன்றாக அரைத்து கொள்ளவும்.
- பின்பு, இதில், சொன்ன மஞ்சள் ரெண்டையும் கலந்து முகத்தில் அப்ளை செய்து ஒரு 15 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு கழுவி விடவும்.
- இதனை தொடரந்து செய்து வந்தால், நாளடைவில் உங்கள் முகம் பிரகாசமாக மாறிவிடும்.