தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் முடிவடைந்ததை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய கூடும். மேலும் ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.