தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு – அரசு அறிவிப்பு..!

0
TASMAC
TASMAC

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு வரும் காலங்களில் உச்சத்தை தொடும் என கூறப்பட்டு வந்த நிலையில் இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா:

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஒரே நாளில் 537 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3550 ஆக அதிகரித்து உள்ளது. இந்நிலையில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. அவை,

இணையத்தை கலக்கும் கொரோனா மீம்ஸ் – கான்செப்ட் ஆன லாக்டவுன்..!

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி – ஹாட்ஸ்பாட் ஆன கோயம்பேடு..!

  • டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
  • டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும் பார்கள் திறக்க அனுமதி இல்லை.
  • கொரோனா நோய் பாதிப்புள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் டாஸ்மாக் திறக்கப்படாது என தெரிவிக்கப்படட்டு உள்ளது.
  • டாஸ்மாக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை.
  • மது வாங்கும் பொழுது கூட்டத்தை தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு தெரிவித்து உள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here