கடந்த இரு நாட்களாக குறைந்து வந்த தங்க விலை மீண்டும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வரும் தங்க விலை ஏற்றம் காணும் போது மட்டும் அதிகளவில் உயர்ந்து மக்களை கவலை அடைய செய்கிறது.
ஊரடங்கு உத்தரவு:
கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் விளைவாக இந்தியாவில் பங்குச்சந்தை மற்றும் ஜிடிபி வரலாறு காணாத அளவு குறைந்தது. இதனால் அச்சம் அடைந்த முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்தனர். காரணம், தங்கம் என்றுமே ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. தங்கத்திற்கு என்று தனி மதிப்பு உள்ளது. “மண்ணுல போடுற காசும், பொன்னுல போடுற காசும் என்னைக்கும் பாதுகாப்பானது தான்” என்று பெரியவர்கள் கூட சொல்லுவார்கள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தங்க விலை சமீப காலமாக அதிரடியாக உயர்ந்து வருகின்றது. முதலீட்டாளர்கள் மொத்தமாக தங்களது பணத்தை இதில் முதலீடு செய்தது தான் காரணம். பொது முடக்கத்தில் கூட தங்க விற்பனை ஜோராக தான் இருந்து வருகின்றது.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
அதேபோல் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறையும் போது படிப்படியாக தான் உள்ளது. ஆனால், உயரும் போது மட்டும் அதிரடியாக உயர்ந்து மக்களை கதிகலங்க வைக்கிறது. நேற்று சற்று குறைந்த தங்க விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து 38,296 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் 64 ரூபாய் உயர்ந்து 4,787 என்று விற்பனை செய்யப்படுகிறது. தூய தங்கமும் ஒரு சவரனுக்கு 512 ரூபாய் அதிகரித்து ரூ.41,320 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5,165 என்று விற்கப்படுகிறது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
தங்கம் தான் இப்படி உள்ளது என்று பார்த்தால் வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 66.70 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.66,700 என்றும் விற்கப்படுகிறது. இந்த விலை நிலவரம் பொது மக்களை கதி கலங்க வைத்துள்ளது.