மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி அன்று சமூக வலைத்தளங்களுக்கான புதிய தொழில்நுட்ப விதிமுறைகளை அறிவித்தது. மேலும் அதனை பின்பற்ற மூன்று மாத கால அவகாசமும் வழங்கப்பட்டது.
சமூக வலைத்தளம்:
இந்திய மக்களுக்கு தற்போது அத்தியவசிய தேவை என்னவென்றால் அது சமூக வலைத்தளம் தான். சிலர் ஒரு நாள் முழுவதும் உணவு இல்லை என்றால் கூட இருந்து விடுவார் ஆனால் ஒரு மணி நேரம் சமூக வலைத்தளங்கள் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். இந்நிலையில் மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி அன்று புதிய தொழிநுட்ப விதிமுறைகளை அறிவித்தது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் இதனை அனைத்து நிறுவனமும் பின்பற்ற மூன்று மாத காலம் அவகாசமும் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தது. அதன்படி புதிய விதிமுறைகளாக புகார் தீர்வு அலுவலர் நியமித்தல், ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை கண்காணிக்க அதிகாரிகள் நியமித்தல் , ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை நீக்குதலுக்கு அதிகாரிகள் நியமித்தல் போன்றவற்றை விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனாவால் 1,15,000 சுகாதார பணியாளர்கள் பலி – உலக சுகாதார அமைப்பு தகவல்!!
தற்போது வரை இதனை ஒரு நிறுவனம் மட்டுமே நியமித்துள்ளது என்றும் வேறு எந்த நிறுவனமும் நியமிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இன்னும் 2 தினங்களில் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் முடங்கி விட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.