ரூ.12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு!!

1

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் பணத்தை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளதாக சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடி

தமிழ்நாட்டில் நிவர் மாற்றும் புரவி போன்ற புயலின் பேரிடர் காரணமாக கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதன்மூலம் 14.43 லட்சம் விவசாயிகள் வாங்கிய பயிர்கடனான 12,110 கோடி ரூபாயை 110 விதியின் கீழ் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். கடனுக்கான உரிய நிதியை வழங்கி, அரசாணையும் வெளியிடப்பட்டு, இந்த கடன்களை தள்ளுபடி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

#INDvsENG டெஸ்ட் போட்டியில் சிப்லே அரைசதம் – நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இங்கிலாந்து!!

முன்னதாக விவசாயசங்கங்கள் விவசாய கடனை ரத்து செய்ய கோரி போராட்டங்கள் செய்தது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் அடிக்கடி இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு மாநில அரசு நிவாரணம் அளித்து வருகிறது. என்றாலும் மத்திய அரசிடமிருந்தும் நிவாரணங்களை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கடந்த 2016 ம் ஆண்டு விவசாயிகளின் பயிர்க்கடனை மாநில அரசு ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து முதலமைச்சர் கூறும் போது, ‘திமுகவினர் தேர்தலின் போது வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால் அதை செயல்படுத்தமாட்டார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அதிமுக மட்டும் தான்’ என பேசினார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here