இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது சென்னை மைதானத்தில் வைத்து தங்களது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் சிப்லே அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி தற்போது முதற்கட்டமாக டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இவர்களது முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை மைதானத்தில் வைத்து துவங்கியது. கொரோனா அச்சம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இங்கிலாந்து அணி சார்பாக பர்ன்ஸ் மற்றும் சிப்லே துவக்கம் தந்தனர். இருவரும் இந்தியா அணியின் பந்துவீச்சை பொறுமையுடன் விளையாடி வந்தனர். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 63 ரன்களை குவித்தது. பின்பு 33 ரன்கள் எடுத்த நிலையில் பர்ன்ஸ் அஸ்வின் சூழலில் சிக்கி தனது ஆட்டத்தை இழந்தார். அதன்பின்பு களமிறங்கிய லாரன்ஸ் பும்ராஹ் வேகத்தில் டக் அவுட் ஆகி அனைவரையும் ஏமாத்தினார்.
‘உரிமைக்காக போராடுவதும், ஆதரிப்பதும் தான் ஜனநாயகம்’ – விவசாயிகளுக்காக வெற்றிமாறன் பதிவு!!
இந்நிலையில் சிப்லே மற்றும் கேப்டன் ரூட் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துவக்க ஆட்டக்காரர் சிப்லே அரை சதத்தை அடித்து அசத்தினார். இவரது அரை சதத்தில் 7 பௌண்டரிகள் அடங்கும். தற்போது களத்தில் சிப்லே 53 ரன்கள், ரூட் 45 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடி வருகின்றனர். இந்தியா அணி சார்பில் அஸ்வின் மற்றும் பும்ராஹ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
லைவ் ஸ்கோர்:
இங்கிலாந்து -140/2
சிப்லே – 53*
ரூட் – 45*