அடுத்த 48 மணிநேரத்தில் வானம் பனிமூட்டத்துடன் காணப்படும் – வானிலை மையம் தகவல்!!

0

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் லேசான பனிமூட்டம் நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

வானிலை நிலவரம்:

05.02.2021 முதல் 09.02.2021 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஆனால் அடுத்த இரண்டு தினங்களுக்கு வட தமிழகத்தில் காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும் காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 20 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும்.

#INDvsENG டெஸ்ட் போட்டியில் சிப்லே அரைசதம் – நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இங்கிலாந்து!!

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

கடந்த 24 மணி நேரத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. மேலும் வரும் 07.02.2021 முதல் 09.02.2021 வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வடகிழக்கு பகுதியில் இருந்து மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். எனவே அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here