அதிமுக தலைவர்களான இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் இன்று நெல்லையில் ஒரே வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். இவர்கள் இருவரும் நெல்லை மாவட்டத்தில் உள்ள கருங்குளத்தில் பி.ஹெச்.பாண்டியனின் மணிமண்டபத்தை திறப்பதற்காக வருகை தந்துள்ளார்கள்.
இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்:
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர். மேலும் முன்னணி கட்சிகளில் ஒன்றான அதிமுக கட்சி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு அந்த கட்சி கடும் நடுக்கத்தை கண்டுள்ளது. அந்த கட்சிக்குள் பிளவும் ஏற்பட்டது. மேலும் கடந்த சில நாட்களாகவே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்தது. மேலும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னிர்செல்வமும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
என்னதான் இருவருக்கும் கட்சியில் பொறுப்பு கொடுத்தாலும் அவர்கள் இடையே சிறு சிறு பிரச்சனைகள் திகழ்ந்து வந்தனர். தற்போது அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஓர் சம்பவம் அரங்கேறி உள்ளது. நெல்லை மாவட்டம் கருங்குளத்தில் முன்னாள் சபாநாயகரான பி.ஹெச்.பாண்டியனின் மணிமண்டபத்தை திறப்பதற்காக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் வருகை தந்துள்ளார்கள். இதற்காக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மதியம் 3 மணி அளவில் மதுரை விமான நிலையத்தில் இருந்து ஒரே வாகனத்தில் புறப்பட்டுள்ளனர்.
கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை – 5 நாளில் சவரனுக்கு ரூ.824 அதிகரிப்பு!!
மேலும் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்திற்கு வந்த உடன் இருவரும் தங்களது தொண்டர்களின் வரவேற்பை ஏற்கும் வகையில் இருவரும் சேர்ந்து வாகனத்தில் மேலே நின்று வரவேற்பை ஏற்றனர். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரையும் ஒரே வாகனத்தில் பார்த்த தொண்டர்கள் படு குஷி அடைந்துள்ளார்கள். மேலும் தற்போது இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வந்தது போல் தெரிகிறது.