வருகிற ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று கட்சியை காப்பாற்றுவேன் என்ற நோக்கில் கட்சியினர் அனைவரும் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றுமாறு இபிஎஸ்-ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளனர்.
அதிமுக:
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு அதிமுக கட்சியில் பல குளறுபாடுகள் நிகழ்ந்தது. சிறை தண்டனைக்கு பின்பு சசிகலா தற்போது தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். மேலும் அவர் அதிமுக கட்சியை அடைந்தே தீரவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இவருக்கும் அதிமுகவினருக்கும் பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. இந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிற 24ம் தேதி அன்று வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னிர்செல்வம் தற்போது தங்களது கட்சியினருக்கு ஓர் கடிதம் எழுதியுள்ளனர். அவர்கள் கூறியதாவது, ஜெயலலிதா நம்மை விட்டு சென்றாலும் அவரது ஆன்மா நம்மை பார்த்துக்கொண்டு தான் இருக்கும். அவரது உழைப்பால் உருவான இந்த இயக்கம் மூலம் மக்களுக்கு நன்மையான விஷயங்களை செய்வோம். அதிமுக இயக்கம் மக்களுக்கு மட்டும் தான் சொந்தம்.
தமிழகத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
இதனை விலை கொடுத்தோ, வசியப்படுத்தியோ வாங்க முடியாது. நம்மை வீழ்த்தும் நோக்கில் இங்கு பலர் முயற்சி செய்து வருகின்றனர். இதனை அனைத்தும் நாம் தோற்கடிக்க வேண்டும். மேலும் மக்கள் எப்போதும் நம் பக்கம் தான் இருப்பார்கள். நம் விசுவாசம் மக்களுக்கும் அதிமுகவிற்கும் மட்டும் தான். மேலும் வருகிற 24ம் தேதி அன்று ஜெயலலிதாவின் பிறந்தநாள். இதனை தொடர்ந்து அதிமுகவை காப்பாற்றுவேன் என்று உறுதி எடுத்து அன்று மாலை 6 மணி அளவில் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும், என்று தெரிவித்துள்ளனர்.