சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் 25ம் தேதி மகா அபிஷேகம் நடைபெறவுள்ளது. ஆண்டுக்கு ஆறு முறை நடைபெறும் இந்த விழாவினை கண்டுகளிக்க ஏராளமான பக்தர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
மகா அபிஷேகம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் நடை பெறுவது வழக்கம். ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு இந்த மகா அபிஷேகம் வரும் 25ம் தேதி மாலை, நடைபெறவுள்ளது. ஆண்டு தோறும் சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி மற்றும் மாசி மாதங்களில் நடை பெறும் இந்த மகா அபிஷேகமானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
தமிழகத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
மார்கழி திருவாதிரை மற்றும் ஆணி திருமஞ்சனத்தின் போது அதிகாலையில் ஆயிரங்கால் மண்டபத்திலும் மற்றைய மாதங்களில் மாலை பொழுதினில் சித்ர சபைக்கு வெளியே உள்ள கனக சபையிலும் மஹா அபிஷேகம் நடைபெறும். இதன் படி தற்போது வரும் 25ம் தேதி ஆணி மாத திருமஞ்சனத்தின் போது மாலை 6.30க்கு தொடங்கி இரவு 11 மணி வரை மகா அபிஷேகம் நடைபெறவுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த மகா அபிஷேகத்தின் போது நடராஜ மூர்த்திக்கும், சிவகாம சுந்தரிக்கும் பால், பன்னீர், விபூதி, தேன் , சர்க்கரை, சந்தானம், பஞ்சாமிர்தம் மற்றும் பூக்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்படும். அதை தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்படும். இந்த மகா அபிஷேகத்தை பக்தர்கள் கண்டுகளிப்பதற்கான ஏற்படுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.