தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவலை தற்போது வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 22.02.2021 அன்று தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் மற்றும் வட தமிழகத்தில் லேசான மழை முதல் மிதமான மழையும் பெய்யும். மேலும் வரும் 23.02.2021 அன்று தமிழக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மழை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் வருகிற 24.02.2021 முதல் 26.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழையும் பெய்யும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்காக ராதிகாவிடம் கெஞ்சும் பாக்கியா – மாட்டிக்கொள்வாரா கோபி??
மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் ஆட்சியர் அலுவலகம் 12 செமி, கடலூர் வானிலை மையம் 11 செமி, திருத்தணி, சிவகிரி தலா 7செமி, போளூர், வானுர் தலா 5செமி, புதுச்சேரி, சீர்காழி, காரைக்கால் தலா 4செமி, மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை,கோத்தகிரி தலா 3செமி மழை பதிவாகியுள்ளது. மேலும் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.