பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்காக ராதிகாவிடம் கெஞ்சும் பாக்கியா – மாட்டிக்கொள்வாரா கோபி??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது விறுவிறுப்பான கதையம்சங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கடைசி நேரத்தில் ராதிகாவை வீட்டிற்கு அழைத்து வருகிறார் பாக்கியலட்சுமி.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலுடன் இணைந்துள்ளனர். ஜனார்த்தனன் பாண்டியன் ஸ்டோர்ஸ் இடத்தை வளைத்து போடுவதற்காக ராதிகாவிடம் டீல் பேச அதற்கு யோசிக்கும் ராதிகா அதன் பிறகு ஒத்துக்கொள்கிறார்.

கோபியும் மூர்த்தியை பார்த்து விட்டு ராதிகாவிடம் அந்த டீல் நமக்கு வேண்டாம் என்றும் கூறுகிறார். ஜனார்தனனிடம் போய் பேச இதற்கு ஒத்துக்கொள்கிறார். ஆனால் ராதிகாவுக்கு ஒரு நெருடலாகவே உள்ளது. கோபி இந்த விஷயத்தை மூர்த்தியிடம் சொல்ல வேண்டாம் என்றும் கூறுகிறார்.

இன்றைக்கு வெளியான ப்ரோமோவில் ராதிகா அந்த இடத்தை ஜனார்தனனுக்கு விற்க ரெஜிஸ்ட்ரசன் ஆபீஸ் செல்கிறார் ராதிகா. ஒட்டுமொத்த குடும்பமும் ராதிகாவிற்காக காத்து கொண்டுள்ளது. அனைவரும் கால் செய்ய யாரும் எடுக்கவும் இல்லை. பாக்கியா தனது போனில் கால் செய்வதாக சொல்ல அது ராதிகா தான் என்று கண்டுபிடிக்கிறார்.

அங்கிருந்து எழிலுடன் ரெஜிஸ்ட்ரசன் ஆபீஸுக்கு கிளம்புகிறார். கையெழுத்திடும் நேரத்தில் ராதிகாவை தடுத்து விடுகிறார். பாக்கியாவை பார்த்த கோபி வேகமாக வெளியில் சென்று விடுகிறார்.

அடுத்ததாக தனது தம்பிக்கு இந்த இடத்தை கொடுக்குமாறு கெஞ்சுகிறார். அதற்கு ஒத்துக்கொண்டு வீட்டிற்கு வருகிறார் ராதிகா. ஒட்டுமொத்த குடும்பமும் பாக்கியாவிற்கு நன்றி சொல்கின்றனர். இதோடு ப்ரோமோ முடிவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here