ஈரமான ரோஜாவே 2 சீரியலில் ரம்யா பார்த்திபன் திருமணத்தை கடைசி நேரத்தில் காவியா வந்து நிறுத்துகிறார்.
ஈரமான ரோஜாவே 2
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் பார்த்திபன்-காவியா ஒன்று சேர்வார்களா?? மாட்டார்களா?? என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனா தேவி எப்படியாவது ரம்யா பார்த்திபன் கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டும் என பல கோல் மால் வேலைகளை செய்து வருகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இப்படி இருக்கையில் இந்த சீரியல் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது காவியா பார்த்திபனை பிரிந்து வாழ முடியாமல் மீண்டும் பார்த்திபனுடன் சேர கல்யாண மண்டபத்திற்கு வருகிறார். அப்போது அவரை உள்ளே விடாமல் தேவி அடியாட்களை வைத்து கடத்திச் செல்கிறார். ஆனால் அந்த இடத்திலும் ஜீவா காவியாவை காப்பாற்றி மஹாலுக்கு அழைத்து வருகிறார்.
அப்போது பார்த்திபன் ரம்யா கழுத்தில் தாலி கட்ட தயாராக அந்த நேரத்தில் காவியா நிறுத்திப் பார்த்தி என்று கத்துகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இதை வைத்து பார்க்கும்போது கடைசி நேரத்தில் காவியா வர பார்வதியே வந்து பார்த்திபன் காவியாவை சேர்த்து வைப்பார் என்று தான் தெரிகிறது.