கடந்த ஒரு வாரமாக அனல் பறக்கும் கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். திருமண மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு வந்த தனம் கண்ணனை திட்டி தீர்க்கிறார். இதை பார்த்து பொறுத்து கொள்ள முடியாத ஐஸ்வர்யா, செய்யக்கூடாத தவறையா கண்ணன் செஞ்சுட்டான். எதுக்கு அவனை ரொம்ப திட்றீங்க என கேட்க, இதை பார்த்த முல்லை பேசுனது போதும் வாயை மூடு என ஐஸ்வர்யாவை திட்டுகிறார். அதற்கு ஐஸ்வர்யா, ஏன் நீங்க மட்டும் தனியா மொய் செய்யலாம், ஆனா நாங்க செஞ்சா தப்பா என முல்லையிடம் கேட்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதற்கு அவர், மல்லி எனக்கு அக்கா. அதுனால தான் நாங்க தனியா மொய் செஞ்சோம் என சமாளிக்கிறார். இதை தொடர்ந்து, கண்ணணின் உண்மையான சம்பளம் 17000 இல்லை, 40000 தான் என்ற உண்மையை, அனைவர் மத்தியிலும் உடைக்கிறார். இதை கேட்டு தனம், மூர்த்தி ஷாக்காகின்றனர். மேலும் ஏன் எங்ககிட்ட சொல்லாம மறைச்சீங்க, உங்களுடைய சம்பளம் இதுதான் என்று உண்மையை சொல்லிருந்தா நாங்க, சந்தோசம் தான் பற்றுப்போம்.
இதுக்கு ஐஸ்வர்யா இந்த வீட்டுல எவ்வளவோ விஷயங்கள் அட்ஜஸ்ட் பண்ணிட்டு தான் இருக்கோம் என கூறுகிறார். இதை கேட்ட மூர்த்தி அப்படி யாரும் இங்க அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்க வேண்டாம் என கோபமாக சொல்லிவிடுகிறார். இதை கேட்ட ஐஸ்வர்யா, உன்னை அசிங்கப்படுத்திய இவங்க வேண்டுமா? இல்லை நான் வேண்டுமா என நீயே முடிவு பண்ணிக்கோ என கூறுகிறார். இதை வைத்து பார்க்கும் போது கண்ணன் கண்டிப்பாக ஐஸ்வர்யாவின் பேச்சை கேட்டு வீட்டை விட்டு சென்று விடுவார் என்று தான் தெரிகிறது. இதுக்கு அப்புறம் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம் எப்படி நகர போகுது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.