தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது தேர்தலுக்காக பிரச்சார வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் தற்போது மத்திய அரசு குறித்து பிரசாத்தில் பேசியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சார வேளைகளில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின் போது அனைத்து கட்சிகளும் மற்ற கட்சிகள் செய்யும் தவறுகளை சுட்டி காட்டி தான் கூறி வருகின்றனர். மேலும் அதற்கு பலி தீர்க்கும் வகையில் அனைத்து கட்சிகளும் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், ‘மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டால் அதிக பலன் கிடைக்கும்’ என்று கூறினார். தற்போது இது பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டு வருகிறது. காரணம் இவர் தற்போது பள்ளிகள் விடுமுறை, கல்லூரிகள் விடுமுறை, விவசாய நகை கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றை அறிவித்தார்.
மார்ச் 31க்குள் பல்கலை தேர்வுகள் அனைத்தும் நடத்தி முடிக்க வேண்டும் – தமிழக அரசு அதிரடி!!
ஆனால் இதுகுறித்து அவர் மத்திய அரசிடம் ஆலோசித்தாரா?? என்று விமர்சித்து வருகின்றனர். இவர் மத்திய அரசிடம் இணக்கமாக செயல்படவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் மத்திய அரசிடம் இணக்கமாக செயல்பட்டால் மக்களுக்கு பலன் கிடைக்குமா? அல்லது கட்சிக்கு பலன் கிடைக்குமா? என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.