விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் இரண்டு புதிய முகங்கள் அறிமுகமாகவுள்ளது. இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியின் பிரபல சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸில் கண்ணன், வீட்டு அலமாரியில் வைத்த பணத்தை திருடி விட, முல்லையை சந்தேகப்படுகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம். முல்லை மீது பழி விழுமா, கண்ணன் உண்மையை ஒத்துக்கொள்வாரா என விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இவ்வாறு இருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக இரண்டு கதாப்பாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக மரணமடைந்த நடிகை சித்ராவுக்கு பதிலாக நடிகை காவ்யா, முல்லை கதாப்பாத்திரத்தில் குமரனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
லெஜன்ட் சரவணனை சந்தித்த சூப்பர் ஸ்டார் – வைரலாகும் புகைப்படம்!!
தொடர்ந்து கண்ணன் கேரக்டருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த வைஷாலி மாற்றப்பட்டு, வேறொருவர் நடித்து வருகிறார். இந்நிலையில் புதிதாக இரண்டு குழந்தை கதாப்பாத்திரங்கள் பாண்டியன் ஸ்டோர்ஸில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அவர்கள் என்ன ரோலில் நடிக்கிறார்கள் என தெரியாத நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையின் பிளாஷ்பேக்கில் அவர்கள் இருவரும் ஜீவா மற்றும் கதிர் எனவும், எனவும் வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸில் அறிமுகமாகும் இருவரில், ஒருவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே பூச்சூடவா’ தொடரில் லீட் ஜோடிக்கு மகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.