தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் ஆயிர கணக்கில் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் 9,10 மற்றும் 11ம் வகுப்பு பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் 12ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்தும் ஆன்லைன் மூலம் பொது தேர்வுகளை நடத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஏற்கனவே இவர்கள் அனைவரும் சுமார் ஒரு வருட காலம் ஆன்லைன் மூலம் கல்வியை கற்று வந்தனர். தற்போது மீண்டும் அந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர், மாணவர்களின் கற்றல் திறன் சிறிது பாதிக்கும் என்றும் கூறி வந்தனர். மேலும் சில மாதங்களுக்கு முன்பு கல்லூரிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடைபெற்று வந்தது.
இந்தியாவில் ஒரே நாளில் 47,262 பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!
மேலும் சில கல்லூரிகளில் தேர்வுகள் நடத்த ஏற்பாடும் செய்தனர். இந்நிலையில் கல்லூரிகள் மூடப்பட்டதால், தற்போது பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு ஓர் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதுஎன்னவென்றால் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வருகிற 31ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து செய்யப்படும் ஆய்வுகளின் அறிக்கையை தினமும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
Which exams semester exams too