‘ஸ்டாலினுக்கு பெருமாள் மீது நம்பிக்கை உள்ளது’ – துர்கா ஸ்டாலினின் கருத்தால் சர்ச்சை!!

0

திமுக கட்சியின் பொதுச்செயலாளர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கடவுள் பெருமாள் மீது நம்பிக்கை உள்ளதாக அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

துர்கா ஸ்டாலின்

திமுக கட்சியின் பொதுச்செயலாளர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நெல்லை மாவட்டம் நாங்குனேரியில் உள்ள ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். தரிசனம் முடித்து கோவிலை விட்டு வெளியே வந்த அவர் கோவிலின் அருகே இருந்த, 85 வயதான பட்டு என்கிற மூதாட்டியை சந்தித்து நலம் விசாரித்து பேசினார். அப்போது அம்மூதாட்டி துர்கா ஸ்டாலினிடம் ஒரு கேள்வியை எழுப்பினார்.

திடீரென உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் மக்கள்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘பெருமாள் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை இருக்கிறதா?’ என்று அம்மூதாட்டி துர்கா ஸ்டாலினிடம் கேட்டுள்ளார். அதற்கு துர்கா ஸ்டாலின், ‘முக ஸ்டாலினுக்கு கடவுள் பெருமாள் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர் கோவிலுக்கு வருவார்’ என பதிலளித்துள்ளார். முக ஸ்டாலினுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் இருந்து வருகிற போது துர்காவின் இந்த கருத்து மக்கள் மத்தியில் வாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here