திடீரென உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் மக்கள்!!

0

நேற்று மாலை வரை எதிர்பாராத அளவிற்கு குறைவாக விற்கப்பட்ட ஆபரணதங்கத்தின் விலை திடீரென உயர்வை கண்டுள்ளது. இந்த எதிர்பாராத உயர்வினால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

விலை உயர்வில் ஆபரணதங்கம்

கடந்த ஐந்து நாட்களாக ஆபரணதங்கத்தின் விலை தொடர்ச்சியாக குறைந்து, விற்பனையிலும் சக்கைபோடு போட்டது. ஐந்து நாட்களுக்குள்ளாக மட்டும் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ஏறத்தாழ 2000 ரூபாய் வரை குறைவாக விற்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் உயர தொடங்கியிருக்கிறது தங்கத்தின் விலை. தொடர்ந்து ஒரு வாரமாக உற்சாகமாக நகை வாங்கி வந்த மக்கள் தற்போது நகை வாங்கும் ஆர்வத்தை சற்றே குறைத்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 14,488 பேர் டிஸ்சார்ஜ்!!

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 4,469 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் 22 காரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 112 ரூபாய் வரை அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 35,752 ரூபாய்க்கு இன்று காலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையில் சற்றே ஏற்றம் கண்டு ஒரு கிராம் வெள்ளிக்கு 80 காசுகள் மட்டும் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ 73.40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here