இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 14,488 பேர் டிஸ்சார்ஜ்!!

0

தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாட்டின் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதை நம்மால் அறிய முடிகிறது.

கொரோனா:

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா என்னும் வைரஸ் பரவி அனைவரையும் துன்பத்துக்கு உள்ளாக்கியது. தற்போது தான் அனைத்து உலக நாடுகளும் கொரோனாவில் இருந்து சற்று மீண்டு வருகிறது. தற்போது இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை வழங்கி வருகின்றனர். இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,08,14,304 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 95 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பால் நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,54,918 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸில் இருந்து 14,488 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டின் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,05,10,796 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 1,48,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 97.16 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் விகிதம் 1.43 சதவீதமாக குறைந்துள்ளது.

ஐபிஎல் மினி ஏலம் – 1,097 வீரர்கள் பதிவு!!

அதேபோல் சிகிச்சை பெறுபவர்களின் விகிதமும் 1.40 ஆக குறைந்துள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 7,40,794 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 20,06,72,589 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 54,16,849 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here