நடிகர் அஜித் வாங்கிய பணத்தை தராமல் ஏமாற்றி விட்டார் – பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

0

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜீத்குமார். இவர் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனிடம் வாங்கிய 6 லட்சம் பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்

”செவன்த் சேனல்” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மாணிக்கம் நாராயணன். தமிழில் சரத்குமார் நடித்துள்ள ”கூலி”, கமல்ஹாசன் நடித்துள்ள ”வேட்டையாடு விளையாடு” உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார் மாணிக்கம் நாராயணன். தற்போது தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் நடிகர் அஜீத்குமாரின் மீது பணம் வாங்கி ஏமாற்றியதாக குற்றம் ஒன்றை சுமத்தியுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் மாணிக்கம் ஒரு தனியார் நிறுவனத்திடம் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணைய சேவை – குஷியில் மக்கள்!!

அனைவராலும் ஜென்டில் மேன் என அழைக்கப்படும் அஜீத்குமார் 1995 ம் ஆண்டு தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனிடம் 5 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கி தனது பெற்றோரை வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளார். தான் கொடுத்த பணத்தை தயாரிப்பாளர் திரும்ப கேட்கும் போது, பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார் நடிகர் அஜீத்குமார். மறுபடியுமாக தயாரிப்பாளர் மாணிக்கம் அஜீத்தை அணுகி ஒரு படத்தில் நடிப்பதற்காக அவரிடம் கால்ஷீட் கேட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

படத்தில் நடிப்பதாக கூறி அவரிடம் மீண்டுமாக 1998 ம் ஆண்டு ரூபாய் 7 லட்சத்தை அட்வான்ஸாக வாங்கியுள்ளார் அஜீத். பின்பாக அந்தப்படம் இடையிலேயே நின்று போனதால் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார் தயாரிப்பாளர் மாணிக்கம். ஆனால் அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திராவை வைத்து தான் பிசியாக இருப்பது போல காட்டியுள்ளார் நடிகர் அஜீத். தற்போது ஒரு படத்திற்கு 50 லட்சம் வரை சம்பளமாக வாங்கி வரும் அஜீத் தன்னுடைய 6 லட்சம் பணத்தை இன்று வரை தரவில்லை என அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here