Friday, April 26, 2024

குடிகார மனைவி!! கொலை செய்த கணவன்!!

Must Read

குடிப்பழக்கம் வீட்டுக்கு கேடு என்பதற்கு சான்றாக, மனைவியின் குடிப்பழக்கத்தால் கணவன் அவரைக் கொலை செய்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

முருகவள்ளி-சண்முகராஜ்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகராஜ். இவரது மனைவி முருகவள்ளி. இவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். 2 குழந்தைகள் உள்ளனர். தூத்துக்குடியில் குடியிருந்து வந்தனர்.

தெரிஞ்சுக்கோங்க ⇛⇛⇛ இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!!

சம்பவத்தன்று முருகவள்ளி தனது வீட்டின் படுக்கை அறையில் பிணமாகக் கிடந்தார். இதனால் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அனுப்பினர் அக்கம் பக்கத்தினர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டனர்.

கணவர் தலைமறைவு

கணவர் வீட்டில் இல்லாததால் சண்முகராஜ் மீது சந்தேகம் அடைந்து தேடிய போது அவர் சொந்த ஊருக்கு நடை பயணம் மேற்கொண்டதை அறிந்து அவரை கைது செய்தனர்.

வாக்குமூலம்

போலீஸிடம் ‘மனைவியை தான் தான் கழுத்து நெரித்து கொன்றதாக’ ஒப்புக் கொண்டார். இது குறித்து அவர் சொல்லும்போது, ‘எங்க குடும்பம் நல்லாதான் போய்ட்டு இருந்தது. லாக்டவுன் போட்டுவிடவும் வீட்டிலேயே முடங்கிட்டேன்.

அப்பதான் என் மனைவிக்கு குடிப்பழக்கம் இருப்பது தெரியவந்தது.. எங்களுக்கு பக்கத்து வீட்டில் இருக்கிற 2 பெண்களுடன் அவள் நெருங்கி பழகினர். அவர்கள் 2 பேரும்தான் என் மனைவிக்கு குடிப்பழக்கத்தை கற்று தந்துள்ளனர்.

‘நீ அழகா இருக்கணும்னா ஓட்கா சாப்பிடு’

மேலும் அவளிடம் ‘நீ அழகா இருக்கணும்னா ஓட்கா சாப்பிடு’ என்று சொல்லி இருக்கிறார்கள்.. அழகுக்கு ஆசைப்பட்ட முருகவள்ளி ஓட்கா சாப்பிட தொடங்கினார்.. அதற்கு அடிமையாகவே ஆகிவிட்டார்.

திருட்டுப் பழக்கம்

கையில் காசு இல்லாமல், வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும்போதுதான், முருகவள்ளி நடவடிக்கை அப்பட்டமாக தெரியவந்தது.. நான் குடித்துவிட்டு போதையில் விழுந்தபிறகு என் சட்டையில் இருந்து பணத்தை எடுத்து தோழிகளுடன் சேர்ந்து ஓட்கா வாங்கி குடித்தாள் முருகவள்ளி.

இதனால் குடும்பத்தில் பண தட்டுப்பாடு வந்துவிட்டது. கையில் பணம் இல்லாமல் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் மனைவி ஏற்கனவே அக்கம் பக்கதினரிடம் கடன் வாங்கி குடித்திருப்பதை அறிந்து மனைவியை கண்டித்தேன். ஆனால், குடிக்க பணம் தராவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று என்னை மிரட்டினாள் முருகவள்ளி.

கொலை

சம்பவத்தன்று, ஓட்கா அடித்துவிட்டு கிடந்தபோது கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன். இப்படியே போனால் குடும்பத்துக்கு பிரச்சனை, குழந்தைகளுக்கு ஆபத்து. என் உயிருக்கும் ஆபத்து.

அதனால்தான் கொன்றேன் என வாக்குமூலம் தந்துள்ளார். தொடர் விசாரணை சண்முகராஜிடம் நடந்து வருகிறது. குடிப்பழக்கத்தால் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான டிப்ஸ்., இதையும் பாலோ பண்ணுங்க?

TNPSC குரூப் 2, 2A தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான டிப்ஸ்., இதையும் பாலோ பண்ணுங்க? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 2,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -