இந்தியாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு SWIGGY நிறுவனம் அறிமுகமானது. ஆன்லைன் மூலம் நமக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து நாம் இருக்கும் இடத்திலேயே உணவுகளை பெற்று கொள்ளலாம். இந்த நிலையில் ரமலான் மாதத்தில் இந்திய மக்கள் எதனை அதிகமாக விரும்பி உண்டனர் என்பது குறித்த தகவல்களை SWIGGY வெளியிட்டுள்ளது.
அதாவது ரமலான் மாதத்தில் ஏறத்தாழ 60 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான மாதங்களை ஒப்பிடும்போது 15 சதவிகிதம் அதிகமான பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த சுவாரஸ்ய ரிப்போர்ட் அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.