ஹரியானாவின் நர்னால் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குச் சொந்தமான பள்ளி பேருந்து பள்ளிக் குழந்தைகளுடன் கனினாவின் உன்ஹானி கிராமம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது பள்ளி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இல்லத்தரசிகளே.., தமிழும் சரஸ்வதியும் மட்டுமல்ல.., இனி இந்த சீரியலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகாது!!!
இந்த விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.