தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு சேகரிப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஏப்ரல் 9) மாலை சென்னை வருகிறார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தியாகராய நகர், பாண்டி பஜார் வழியாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார்.
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.. பழைய தருணங்களை நினைவு கூர்ந்த CSK கேப்டன் ருதுராஜ்!!
இதையடுத்து ஜிஎஸ்டி சாலை, 100 அடி சாலை, அண்ணா சாலை, காந்தி மண்டபம் சாலை, T.நகர் ஆகிய இடங்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பயணங்களை தவிர்க்குமாறும், வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதேபோல் மவுண்ட் பூந்தமல்லி சாலை, வடபழனி, வள்ளுவா் கோட்டம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.