இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் வது லீக் போட்டியில் சென்னை அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் விளையாடிய கொல்கத்தா 137 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களம் இறங்கிய சென்னை அணி 17.4 ஓவர் முடிவில் 141 ரன்கள் அடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி குறித்து அந்த அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதாவது கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டி, நான் ஐபிஎல் தொடரில் முதல் முதலாக அரை சதம் அடித்த தருணத்தை எனக்கு நினைவூட்டியது. அப்போது மஹி பாய் என்னுடன் இருந்தார். நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்துதான் அந்தப் போட்டியையும் நிறைவு செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் திடீரென நிறுத்தப்படும் மக்களவைத் தேர்தல்?? காரணம் இதுதான்!!!