தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இன்னொரு பக்கம் இந்த தேர்தலில் பண மோசடிகள் எதுவும் நடக்க கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் சில இடங்களில் சரியான ஆவணமின்றி பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இன்று கூட 4 கோடி ரூபாய் பணம் எந்த ஆவணமும் இன்றி பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. இப்படி இது தவிர ஒரு சில இடங்களில் பண பட்டுவாடா நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக ஒரு சில தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு தனியாக நடத்த அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இல்லை என்றால் அந்த தொகுதிகளில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு சிறப்பு கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.