தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் அன்றைய தினத்தில் வாக்களிக்க ஏதுவாக போக்குவரத்து கழகம் சிறப்பான ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. அதாவது வரும் 17, 18ம் தேதிகளில் சென்னையில் இருந்து தினசரி இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 2970 சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பிற ஊர்களில் இருந்து 3000 சிறப்பு பேருந்துகளும் ஒட்டுமொத்தமாக 10,214 சிறப்பு பேருந்துகளும் தமிழக முழுவதும் பிற ஊர்களுக்கு இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் முன்கூட்டியே tnstc official app மற்றும் www.tnstc.in என்ற இணையதளங்கள் மூலம் டிக்கெட் புக்கிங் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.