இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு போதை பொருள் கடத்தியதாக ஜாபர் சாதிக், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர், சையது இப்ராஹிம், அப்துல் பாசித் புகாரி ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி இவர்களிடம் டெல்லியில் விசாரணை நீண்ட நேரம் நடைபெற்ற நிலையில், மீண்டும் விசாரணைக்கு வர வேண்டியிருக்கும் என கூறி இருந்தனர்.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 9) காலை முதல் இயக்குனர் அமீர் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். அதேபோல் ஜாபர் சாதிக், அப்துல் புகார் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 30 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.. பழைய தருணங்களை நினைவு கூர்ந்த CSK கேப்டன் ருதுராஜ்!!