மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தமிழக முழுவதும் கிட்டத்தட்ட 1 கோடியே 63 லட்சம் மக்கள் மாதந்தோறும் பயனடைந்து வருகின்றனர். மேலும் இத்திட்டத்தை இன்னும் விரிவாக்க மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பமும் பரிசீலனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிலருக்கு இந்த மகளிர் உரிமை தொகை கிடைக்காததால் பிரச்சாரத்திற்கு வரும் திமுக தலைவர்களிடம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எம்பி கனிமொழி இன்னும் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயன் பெறாதவர்களை இணைக்க தேவைப்பட்டால் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதை வைத்து பார்க்கும்போது தேர்தல் சமயத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திமுக அரசு மீண்டும் சிறப்பு முகாம்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது என்று தான் தெரிகிறது.