சீரியல் என்று சொன்னாலே எப்போதும் அனைவருக்கும் நினைவில் வருவது விஜய் டிவி தான். அந்த அளவிற்கு சீரியல்கள் மூலம் மக்களை கட்டிப்போட்டு வைத்துள்ளனர். மேலும் இதில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுமே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் ஒரு சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும்.
இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. தற்போது இதைத் தொடர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியாகும் வகையில் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது தமிழும் சரஸ்வதியும் சீரியலை தொடர்பு மதியம் 4 மணிக்கு ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் தொடரும் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது