கடந்த சில நாட்களாக உலகையே உலுக்கிய விஷயம் என்றால் அது மணிப்பூர் விவகாரம் தான். அந்த விவகாரத்திற்கு பலரும் கண்டனங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் திமுக மகளிரணி சார்பில் மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திமுக மாவட்ட பெண் சேர்மேன் தமிழ்ச்செல்வியை தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பேசவிடாமல் தடுத்ததாக சொல்லப்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதற்கு ஆத்திரமடைந்த தமிழ் செல்வி கோபத்தில் கத்தியுள்ளார். அதற்கு சிவபத்மநாதன் என்ன மணிப்பூர் மாதிரி உனக்கும் சேலையை உருவனுமா என்று கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் திமுக தலைமைக்கு சென்ற நிலையில் மாவட்டச் செயலாளராக இருந்த சிவபத்மநாதன் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு சுரண்டை நகரச் செயலாளராக செயல்பட்ட ஜெயபாலன் என்பவரை திமுக தெற்கு மாவட்ட செயலாளராக நியமித்து திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.