கொலை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த தண்டனை வலி மிகுந்ததாக இல்லாமல், வெளிநாடுகளை போல துப்பாக்கியால் சுடுதல், விஷ ஊசி செலுத்துதல் உட்பட வலி குறைந்த மரண தண்டனையை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு சார்பில், “வலி குறைவான மரண தண்டனை நிறைவேற்றுவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என குறிப்பிட்டுள்ளனர். இதனால் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.