இயக்குனர் ராஜமவுலி ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
RRR படம்:
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் தான் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வசூல் சாதனை படைத்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனை தொடர்ந்து அண்மையில் கோல்டன் குளோபல் விருது, 2 சர்வதேச விருது மற்றும் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் RRR திரைப்படம் பெற்றிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் ராஜமவுலி ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார்.
குட்டை பாவாடையில் குதித்து ஆட்டம் போடும் காவியா.., ஏங்கி நிக்கும் இளசுகள்!!
அதாவது அவர் பேசியதாவது, நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கார் விருது பெற்றது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த விருது மேலும் எங்களுக்குள் உற்சாகத்தை தருகிறது .எனவே ஆர் ஆர் ஆர் படத்தின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் எடுப்போம். அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்குவோம் என்று தெரிவித்துள்ளார். ராஜமவுலி பேசியதை தொடர்ந்து, ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.