அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான சம்பளம் உயர்வு., அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!!!

0
அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான சம்பளம் உயர்வு., அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!!!
அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான சம்பளம் உயர்வு., அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!!!

அரசுப் பள்ளியில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு உயர்த்தப்பட்டதால் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொகுப்பூதிய உயர்வு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் தேர்வு பெரும் தேர்வர்களுக்கு பணி நியமனம் வழங்கும் வரை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்த ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.7,500ல் இருந்து ரூ.12,000ஆகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.10,000ல் இருந்து ரூ.15,000 ஆகவும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,000ல் இருந்து ரூ.18,000 ஆகவும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(16.03.2023)-முழு விவரம் உள்ளே!!!

இந்த தற்காலிக ஆசிரியர்கள் நீண்ட காலமாக ஊதிய உயர்வுக்காக போராடி வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளதால் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் புதிதாக நியமிக்கப்பட உள்ள ஒப்பந்த ஆசிரியர்களுக்கும் இந்த ஊதிய உயர்வானது பொருந்தும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here