கொரோனாவால் நாடெங்கிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ஒத்துவைக்கப்பட்டன. தற்போது அந்த தீவுகள் நடைபெற உள்ளன.
பொது தேர்வு
ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட பொது தேர்வுகள் ஜூன் 15 முதல் ஆரம்பமாகிறது. 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஜூன் 15 யிலும் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு ஜூன் 16 யிலும் நடைபெற உள்ளது. 12 ஆம் வகுப்பு விடுபட்ட தேர்வுகளை நடத்த திட்டமிட்டு வருகிறது.
வீட்டுக்குள் சிக்னல் இல்லை – மேற்கூரையின் மீது ஏறி ஆன்லைனில் படிக்கும் மாணவி..!
இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களுக்கு தமிழக அரசு கட்டுப்பாட்டுடன் கூடிய எளிய நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
அதன்படி, தேர்வெழுதவுள்ள மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லவும், மீண்டும் வீட்டிற்கு வரவும் ஏதுவாக சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும், தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் அப்பேருந்தில் பயணிக்கலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.