பஞ்சாபில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அம்மாநிலத்தின் மொஹாலி மற்றும் ஃபதேஹர் ஆகிய இரண்டு இடங்களில் இரவு நேர பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் பொது முடக்கம்
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று இந்தியாவில் பரவியதை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதுக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்பு இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்தது வந்ததையொட்டி பொதுமுடக்க தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஐந்து மாதங்களுக்கு பிறகு மீண்டுமாக இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியாவில் சில வாரங்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இதில் மஹாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இதில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 21ம் தேதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் – கண்காணிப்பதற்கு சிறப்பு பறக்கும் படை நியமனம்!!
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் மொஹாலி மற்றும் ஃபதேஹர் ஆகிய பகுதிகளில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது அம்மாநில அரசு. இந்த வகையில் மார்ச் 12ம் தேதி முதல் இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரை பொதுமுடக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பஞ்சாப் பாட்டியாலா பகுதி இரவு நேர பொது முடக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.