சௌந்தர்யாவிற்கு உடலில் இருக்கும் பேராபத்து – காப்பாற்றுவாரா பாரதி?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் சுமதியை பெரும் ஆபத்தில் இருந்து பாதுகாக்கிறார் கண்ணம்மா. இதனால் மனம் திருந்துகிறார் சேகர். மேலும் சௌந்தர்யா சீரியஸ் கண்டிஷனில் ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் இத்தனை நாட்கள் கண்ணம்மாவை தேடி அலைந்த சௌந்தர்யா தற்போது தனது பேத்தியையும் சேர்த்து பார்த்த சந்தோஷத்தில் இருந்தார். இதனால் அவர் மயக்க நிலையையும் அடைந்தார். எதோ ஒரு கவலை அவரை ஆட்டி படைத்துக்கொண்டிருந்தது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அது நிறைவேறியதும் அதுவே அவருக்கு ஆபத்தாகிவிட்டது. அடுத்ததாக கண்ணம்மா சுமதியை பார்க்க வீட்டிற்கு வர அங்கு சேகர் குடித்து விட்டு சுமதியை சுத்தியல் கொண்டு அடிக்க வருகிறார். சரியான நேரத்தில் கண்ணம்மா தடுத்து விடுகிறார். கோவமடையும் சேகர் கண்ணம்மாவை வாடி போடி என்று பேச ஆரம்பிக்கிறார்.

சுத்தியலை வாங்கி கண்ணம்மா அவரை அடிக்கிறார். சுமதி கண்ணம்மாவிடம் அவரை விடும்படி கெஞ்சுகிறார். பொண்ணுங்கனா என்ன கேவலமா நெனச்சியா?? எவ்வளவு தைரியம் உனக்கு என்று சொல்ல சேகர் கண்கலங்குகிறார். சுமதியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் சேகர்.

போர்களை விட கொரோனாவால் தான் அதிக பலி – ஜோ பைடன் வருத்தம்!!

அடுத்து கண்ணம்மா மறுவாழ்வு மையத்தில் இருந்து வரவழைத்து சேகரை அனுப்பி வைக்கிறார். அடுத்து சௌந்தர்யாவை காட்டுகின்றனர். சௌந்தர்யாவின் உடல் ஓரளவிற்கு தேறி வருகிறது. பாரதி மனதுக்கு எதோ தவறாக படுகிறது. பாரதியிடம் வேணு சௌந்தர்யாவிற்கு என்ன ஆச்சு என்று கேட்கிறார்.

அவருக்கு உடலில் எந்த பிரச்சனை இல்லையென்றும், மனதில் தான் எதோ ஒரு பிரச்சனை, மனநல மருத்துவரிடம் அம்மாவை காட்ட வேண்டும் என்று சொல்கிறார். இதனை வைத்து பார்க்கும்போது கண்ணம்மா வந்தால் தான் சௌந்தர்யா தேறி வருவார் என்று சொல்ல போகிறார்கள். இறுதியில் இப்படி தான் முடிய போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here